தேவையான பொருட்கள்: வடித்த சாதம்- 2 கப் எலுமிச்சை சாறு - 3 தாளிக்க: நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி கடுகு- 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி சீரகம்- 1/2 தேக்கரண்டி மிளகாய்வற்றல்- 2 பெருங்காயம்- சிறிதளவு மஞ்சள் தூள்- சிறிதளவு உப்பு- சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி செய்முறை: சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும் (குழைய விடக் கூடாது). வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும். எழுமிச்சை சாறு பிழிந்து தனியே வைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு பிழிந்த எழுமிச்சை சாறை ஊற்றி மஞ்சள், பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி விடவும். ஆறின சாதத்துடன் எழுமிச்சை கரைசலை கொட்டிக் கிளறவும். கொத்தமல்லி தூவிப் கிளறவும் சுவையான எலுமிச்சை சாதம் தயார்...... கலர்புல்லாக இருக்கவேண்டும் என்றால் துருவிய கேரட்டை துவி அலங்கரிக்கலாம். அவித்த முட்டை, சிக்கன், மட்டன், மீன் பிரை...
Comments
Post a Comment